பன்னேர்கட்டா பூங்கா புலி, சிங்கம், சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி, யானை, தேவாங்கு, சாம்பார் மான், குள்ள நரி, காட்டுப் பண்ணி மற்றும் சில பறவைகளுக்கும், பட்டாம்பூச்சிகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. அதோடு பயணிகளுக்கு அதிஷ்டம் இருந்தால் அரிதான வெள்ளை புலிகளையும், அழகான வங்காளப் புலிகளையும் கூட பார்க்கலாம்.
இங்குள்ள மிருகங்கள் சில சர்க்கஸ் போன்ற மிருகங்களை சித்ரவதை செய்யும் இடங்களிலிருந்து மீட்கப்பட்டது. அவை அனைத்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு வேலிக் கம்பிகள் அடைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா தான் இந்தியாவிலேயே முதல் முதலாக பட்டாம்பூச்சிகளுக்கென்று உருவாக்கப்பட்ட பூங்கா. இதை மத்திய அமைச்சர் கபில் சிபல் 2006-ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இதில் மொத்தம் 20 வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் கண்ணாடிக் கூண்டுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.