1956ம் ஆண்டு பஸ்தியில் அமைக்கப்பட்ட இந்த தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப்பகுதியில் ஒரு முக்கியமான தாவரவியல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி கேந்திரமாக இயங்கிவருகிறது.
இது நிபுணர்களை மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கும் வகையில் மிக அழகாக பராமரிக்கப்பட்டு வரும் தோட்டப்பூங்காவை கொண்டிருக்கிறது.
பலவிதமான பழங்களை தரும் தாவரங்கள், அழகுச்செடிகள், காய்கறிச்செடிகள் மற்றும் தானியப்பயிர்கள் என்று விரிவான பிரிவுகளில் இந்த மையம் ஆராய்ச்சிகளை மேற்கொன்டு பயிற்சிக்கல்வியையும் அளித்து வருகிறது.
குறிப்பாக உணவுக்காளான்கள் குறித்த ஆய்வு இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தரம் வாய்ந்த காளான் விதைகளை இங்கிருந்து வியாபார விவசாயிகள் வாங்கிச்செல்கின்றனர்.
தேன் தயாரிப்பிற்கென்று பிரத்யேகமான தேனிப்பண்ணையும் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. தேனி வளர்ப்பிற்கான பயிற்சி வகுப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன.
ஆம்ரபாலி, ருமானி மற்றும் நீலம் போன்ற சுவையான மாம்பழ வகைகளுக்கும் இந்த பஸ்தி நகரம் புகழ் பெற்றுள்ளது. இந்த வகை மரக்கன்றுகள் இங்கிருந்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.



Click it and Unblock the Notifications