உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள ஒரு மாவட்டத்தின் தலைநகரம் இந்த ராய் பரேலி ஆகும். 1858ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது இந்த மாவட்டம் பிரித்து உருவாக்கப்பட்டது. பல சுவாரசிய சுற்றுலா அம்சங்களை கொண்டிருக்கும் இந்த மாவட்டத்தில் சமஸ்பூர் பறவைகள் சரணாலயம் மற்றும் இந்திரா காந்தி மெமோரியல் பாடனிகல் கார்டன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்திரா காந்தி குடும்பத்தாரின் விசேஷ தேர்தல் களமாக இருந்த வந்தபோதிலும் 2012ம் ஆண்டில் இங்கு வித்தியாசமான முடிவுகளை காங்கிரஸ் சந்திக்க நேர்ந்தது.
ராய் பரேலி மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
ராய் பரேலி நகரம் மற்றும் மாவட்டத்தில் பார்த்து ரசிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. மேலே குறிப்பிட்டிருப்பது போல சமஸ்பூர் பறவைகள் சரணாலயம் இங்குள்ள ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.
இந்த சரணாலயத்தில் 250 வகையான பறவை வகைகளும் மற்ற காட்டு உயிரினங்களும் வசிக்கின்றன. இன்னொரு முக்கிய அம்சமான இந்திரா காந்தி மெமோரியல் பாடனிகல் கார்டன் பூங்காவில் அபூர்வ மருத்துவ மூலிகைகள் மற்றும் அலங்கார மலர்த்தாவரங்கள் அதிகம் வளர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த வளாகத்தின் உள்ளே ஒரு தாவரவியல் ஆராய்ச்சி மையமும் உள்ளது.
தல்மாவ் எனும் வரலாற்று நகரமும் ராய் பரேலி மாவட்டத்தில் முக்கியமான ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. இங்கு தல் ராஜாவின் கோட்டை, பாரா மத் மற்றும் மஹேஷ் கிரி மத் போன்ற முக்கியமான அம்சங்கள் அமைந்துள்ளன.
சாய் ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் பேட்டா பாலம் மற்றும் மாவட்டத்திலேயே மிகப்பழமையான நகரமான ஜைஸ் போன்றவையும் ராய் பரேலி சுற்றுலாவின்போது தவறவிடக்கூடாத அம்சங்களாகும்.
எப்படி செல்வது ராய் பரேலி மாவட்டத்துக்கு
விமானம், ரயில், சாலைப்போக்குவரத்து போன்ற மூன்று போக்குவரத்து மார்க்கங்கள் மூலமாகவும் எளிதில் ராய் பரேலிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம்.
சுற்றுலாவுக்கேற்ற பருவம்
நவம்பர் முதல் மார்ச் வரையுள்ள பருவமே ராய் பரேலிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது.