ராய் பரேலி மாவட்டத்தில் புனித கங்கை நதியின் கரையில் இந்த தல்மாவ் எனும் புராதன வரலாற்று நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பல முக்கியமான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன.
ராஜா தல் கோட்டை, பரா மத் மற்றும் மஹேஷ் கிரி மத் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. சூர்ய காந்த் திரிபாத் நிரலா எனும் புகழ் பெற்ற கவிஞர் வாழ்ந்த இடம் என்பதால் இலக்கிய துறையிலும் இது பிரசித்தமான இடமாக அறியப்படுகிறது. இங்குள்ள கோட்டையில் அமர்ந்தபடி தனது கவிதைகளை அவர் எழுதியதாக சொல்லப்படுகிறது.
இங்கு நவாம் சுஜா உத் தௌலாவிற்கு சொந்தமான இப்ராஹிம் ஷார்க்கி எனும் அரண்மனையும் அமைந்துள்ளது. அத்துடன் அல்லா உதல் பைதக் எனும் இடத்தையும் பயணிகள் பார்க்கலாம். மேலும் தல்மாவ் பம்ப் கெனால் எனும் பகுதியில் ஓய்வான நடைப்பயணத்திலும் ஈடுபடலாம்.