லக்னோ- வாரனாசி நெடுஞ்சாலையில் இந்த இந்திரா காந்தி மெமோரியல் பாடனிகல் கார்டன் எனும் தோட்டப்பூங்கா அமைந்திருக்கிறது. இது 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
57 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்கா சாய் ஆற்றின் கரைமீது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. மூலிகைத்தாவரங்கள், மலர்ச்செடிகள் மற்றும் பூந்தோட்டம் மட்டுமல்லாமல் இங்கு ஒரு ஆராய்ச்சி கல்வி மையமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
தாவரவியல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட விரும்புவோர்க்கு உதவும் வகையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான மூலிகைச்செடிகள் மற்றும் அலங்கார மலர்ச்செடிகளின் சேகரிப்பை இங்கு காணலாம்.
பாறைத்தோட்டம், ரோஜாத்தோட்டம், பருவகால தோட்டம் மற்றும் நீர்த்தாவர தோட்டம் ஆகியவற்றுடன் கிரீன்ஹவுஸ் எனும் கண்ணாடி பூங்கா அமைப்பையும் இந்த வளாகம் கொண்டிருக்கிறது.