பார்வதி குகையை பார்த்து முடித்த பிறகு, அப்படியே அங்கிருந்து போஜர் அரசரின் அரண்மனைக்கு சென்று பார்ப்பது வசதியாக இருக்கும். அரண்மனை முற்றிலும் அழிக்கப்படிருந்தாலும், அதன் அடித்தளம் அப்படியே இருக்கிறது.
இந்த அடித்தளத்தை வைத்தே, அந்த காலத்தில் இந்த அரண்மனை எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்பதை உணர முடியும். சுற்றி வேலி அமைத்தது போன்ற அமைப்பு கொண்டு, அதன் நடுவே அழகிய முற்றத்தைக் கொண்டதாக அமைந்திருக்கிறது போஜர் அரண்மனை.
கட்டிடக் கலை ஆய்வுகளின் படி, இதனை வடிவமைத்தது போஜ அரசர் என்றும் இதனை சமரங்கன சுத்ரதார என்றும் கூறுவர். செதுக்கப்பட்ட கட்டமைப்புக்கள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகளால் ஆன அழகிய தரை என அரண்மனை எழில்கொஞ்சும் இடமாக காட்சியளித்திருக்கிறது.
அரண்மனையில் இருக்கும் விளையாட்டு தொடர்பான வரைபடங்கள், அரசரின் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு எண்ணங்களை வெளிப்படுத்துபவையாக விளங்குகின்றன.



Click it and Unblock the Notifications