பீரில் பயணிகளை சிலிர்க்கச் செய்யும் சாகச விளையாட்டுக்களில் பேராகிளைடிங் முக்கியமானது. இதன் காரணமாகவே இவ்விடம் பிரபலமாக ‘இந்தியாவின் பேராகிளைடிங் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகின்றது. பீரில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் பில்லிங்கில் இதற்கான தரையிறங்கும் தளம் இருக்கிறது.
அனுபவம் இல்லாதவர்களால் பேராகிளைடிங் செய்ய முடியாது, எனவே இதற்கு பயிற்சி அவசியம். பீரில் இருக்கும் பல்வேறு தனியார் சுற்றுலா அமைப்பினர் பேராகிளைடிங்கிற்கான அடிப்படை பயிற்சியும் கருவிகளும் அளிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில், சுற்றுலாத் துறை, பயணிகள் விமான போக்குவரத்து மற்றும் இமாச்சல பிரதேச அரசாங்கம் இங்கே ‘பேராகிளைடிங் உலக கோப்பை’ நிகழ்வை நடத்துக்கின்றது.
மார்ச் முதல் மே வரையிலும், பின்னர் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் ஆர்வமுள்ள பயணிகள் இங்கே பேராகிளைடிங்கை முயற்சிக்கலாம். இக்காலகட்டத்தில் வானிலை விரும்பத்தக்கதாகவும், இனிமையாகவும் இருக்கின்றது.