சைல் நகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 2144மீ உயரத்தில் பிரபலமான சுற்றுலாதலமான சைல் இராணுவப் பள்ளி அமைந்துள்ளது. முதல் உலகப் போருக்குப் பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் தேசிய நிதியிலிருந்து ரூ.250,000/- வழங்கப்பட்டு, 1922-ஆம் ஆண்டில் இந்த பழமையான பள்ளி திறக்கப்பட்டது.
எனவேதான் இங்கிருக்கும் வீரர்கள் 'ஜார்ஜியன்ஸ்' என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பள்ளி உலகத்திலேயே மிகவும் உயரமான கிரிக்கட் மைதானம் மற்றும் போலோ மைதானத்தை பெற்றுள்ள இடமாகும்.