சம்பல் சரணாலயப்பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகள் மட்டுமல்லாது யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பாடேஷ்வர் கோயிலையும் பயணிகள் தரிசிக்கலாம்.
இந்த தொகுப்பு கோயில் வளாகத்தில் சிவபெருக்கான 100க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளன. இந்த பாடேஷ்வர் ஸ்தலம் கிருஷ்ணர் அவதரித்த ஸ்தலமாகவும் கருதப்படுவதால் இந்த கோயில் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.
இந்த கோயிலுக்கு அருகிலுள்ள உயரமான ஆற்றுப்பிளவுப்பள்ளத்தாக்கு பிரதேசத்தில் நாக சாதுக்கள் அதிக எண்ணிக்கையில் குடிசைகள் மற்றும் குகைகளில் வசிக்கின்றனர்.
இந்த கோயிலுக்கு அருகே ஓடும் யமுனை நதிக்கரையில் பல்விதமான வசிப்பிட மற்றும் புலம்பெயர் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம். ராட்சதக்கொக்கு மற்றும் பலவண்ண மீன்கொத்திகள் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
நவம்பர் மாதத்தில் இந்த கோயில் ஸ்தலத்தில் ஒரு பெரிய கால்நடைச்சந்தை நடைபெறுகிறது. அச்சமயம் சாமியார்கள், சாதுக்கள், வியாபாரிகள் மற்றும் கிராமவாசிகள் போன்றோர் இங்கு திரள்கின்றனர்.



Click it and Unblock the Notifications