சம்பல் சரணாலயத்தின் உட்பகுதிகளையும் காட்டுயிர்களையும் பார்த்து ரசிக்க இந்த ஒட்டகச்சவாரிப்பயணம் உதவியாக உள்ளது. மிக நீண்ட காட்டுப்பாதைகள், ஆற்றங்கரையை ஒட்டிய நடைபாதைகள், பள்ளத்தாக்குகள், கிராமங்கள் வழியாக இந்த ஒட்டகப்பயணத்தை மேற்கொள்ளலாம். ஆற்றங்கரைப்பகுதியில் கரியல் முதலைகள், ஆலிகேட்டர் முதலைகள் மற்றும் கங்கை டால்பின்கள் போன்றவற்றையும் காணவும் வாய்ப்புள்ளது.
மேலும் இந்த பயணத்தின்போது இந்தியன் ஸ்கிம்மர், காமன் போச்சார்ட், ரட்டி ஷெல்டக், லெஸ்ஸர் விசிலிங் டீல், மஞ்சள் லாப்விங், சீப்பு வாத்து, மீன்கொத்தி, ஹவுஸ் ஸ்விஃப்ட், மஞ்சள் கால் பச்சைப்புறா மற்றும் புள்ளி அலகு வாத்து போன்ற பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம்.
யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் பாடேஷ்வர் எனும் புராதனமான கோயிலுக்கு இந்த ஒட்டகச்சவாரி மூலமாக பயணம் மேற்கொள்ளலாம். இந்த கோயில் வளாகத்தில் சிவபெருமானுக்கான 100க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications