கிராம சஃபாரி எனும் பொழுது போக்கு பயணம் சம்பல் சரணாலயத்திற்கு அருகிலுள்ள பழமையாக கிராமப்பகுதிகளை பார்த்து ரசிப்பதற்கு உதவியாக உள்ளது. இந்த கிராமங்கள் பண்டைய இந்தியாவின் கிராம வாழ்க்கை நாகரிகத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கின்றன.
இந்த கிராமங்களில் கலைஞர்கள் மண்பாண்டங்கள் மற்றும் மண் குவளைகள் போன்ற சுடுமண் பொருட்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதை நேரில் பார்த்து ரசிக்கலாம்.
காலணிகள் போன்ற தோல்பொருட்கள் தயாரிப்பிலும் இந்த கிராம மக்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இங்குள்ள கிராம அங்காடிகளில் உள்ளூர் தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள், பாரம்பரிய இனிப்பு வகைகள் போன்றவற்றை பயணிகள் வாங்கலாம்.
கிராம சஃபாரி பயணத்தில் ரம்மியமான இயற்கை அழகு நிரம்பிய ஏராளமான இடங்களை பார்த்து ரசிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பலவிதமான பறவைகள் மற்றும் காட்டுயிர்களை தரிசிக்கவும் வாய்ப்புள்ளது.
கிராம சஃபாரி பயணத்தின்போது உள்ளூர் மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. இப்பகுதிகளில் எல்லாமே மிக மெதுவாக நகர்வதை பார்த்து ரசிக்கலாம்.
மக்கள் எல்லோருக்கும் எல்லோரையுமே தெரிந்திருக்கிறது. அன்போடு உபசரிக்கும் குணம் உடையவர்களாகவும் சுற்றுலாப்பயணிகளிடம் விருப்பத்தை உரையாடுபவர்களாகவும் இந்த மக்கள் காணப்படுவது ஒரு சுவாரசியம்.



Click it and Unblock the Notifications