விந்தியாச்சல் மலைத்தொடர்களின் பசுமையினூடாக குடியிருக்கும் இடமாக சிங்புர் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை சாந்தேரியிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது.
1656-ம் ஆண்டு தேவி சிங் புண்டேலாவால் இந்த மூன்றடுக்கு அரண்மனை கட்டப்பட்டது. அரசர் தொடர்ச்சியாக வேட்டையாட வரும் வேளைகளில் அவருடைய ஓய்விடமாக இந்த அரண்மனை இருந்து வந்தது.
இதன் அருகில் உள்ள குளத்தின் காரணமாக சிங்புர் அரண்மனையின் அழகு மேலும் கூடியுள்ளது. 1433-ம் ஆண்டு ஹோசுங் ஷா கோரியின் ஆட்சிக் காலத்தில் மாலிக் ஹைவாத் நிஜாம் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த குளம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடமாகும்.
ராவாதாஸ்களின் குல-தேவதா என்ற குடும்ப தெய்வத்திற்கான கோவில் ஒன்றும் இந்த அரண்மனையின் வாயிலருகே உள்ளது. பசுமையான காடுகள் மற்றும் அமைதியான ஏரி ஆகியவற்றுடன் இந்த அழகிய அரண்மனை அமைந்திருப்பதால், இது ஒரு மிகச்சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கும் இடம் என்பதில் ஐயமில்லை.



Click it and Unblock the Notifications