கலவர துர்க்கா என்று அழைக்கப்படும் இந்த ஸ்கந்த கிரி திப்புசுல்தான் காலத்தை சேர்ந்த ஒரு மலைக்கோட்டையாகும். இந்த புராதன அமைப்பு 1350 மீட்டர் உயரத்தில் நந்திமலைத்தொடரில் அமைந்துள்ளது.
மலையிலிருந்து இந்த கோட்டையை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இந்த கோட்டையை கட்டிய உள்ளூர் ராஜா திப்பு சுல்தானின் தாக்குதலை எதிர்த்து பல நாட்கள் கோட்டையை பாதுகாத்ததாக உள்ளூர் கதைகள் சொல்லப்படுகின்றன.
ஸ்கந்த கிரியிலுள்ள இரண்டு குகைகளையும் கூட பயணிகள் பார்க்கலாம். இவை இரண்டும் இன்னமும் சரியாக ஆராயப்படாமல் உள்ளன. உள்ளூர் மக்கள் இந்தக்குகை வழியாக கோட்டைக்கு செல்ல பாதை இருக்கின்றது என்று நம்புகின்றனர்.
மேலும் இந்த குகைகளில் 6 சமாதிகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. அதுதவிர உள்ளூர் மக்கள் இந்த குகைகளில் மலைப்பாம்புகள் வசிப்பதாகவும் அவை அந்த வழியாக செல்லும் செம்மறியாடுகளை விழுங்கி வருகின்றன என்றும் கூறுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பல்லாபூர் மிதமான பருவ நிலையை கொண்டுள்ளது. இங்கு கோடைக்காலம் மிக உஷ்ணமானதாகவும் அதிக பட்சமாக 40° C வெப்பநிலையை கொண்டதாகவும் காணப்படுகிறது. குளிர்காலத்தில் 19° C குறைந்தபட்ச வெப்பநிலையுடன் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.