கார்பெட் தேசிய பூங்காவில் நீங்கள் செய்யும் யானை சவாரி உங்களுடைய வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த யானை சவாரிகள் உங்களை காட்டின் மிகவும் அடர்த்தியான வனப்பகுதிகளுக்கும் மற்றும் இடைப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று அங்கிருக்கும் கானக தாவர இனங்களைப் பார்க்கும் வாய்ப்பினை கொடுக்கும்.
பழக்கப் படுத்தப்பட்ட யானைகளில் இந்த தேசியப் பூங்காவின் இண்டு இடுக்குகளையும் நன்றாக அறிந்த திறமையான பாகன்கள் உங்களை யானை சவாரிக்கு அழைத்துச் செல்வார்கள்.
பிஜ்ரானி மற்றும் திக்காலா பகுதிகளில் நியாயமான விலைகளில் யானை சவாரி செய்யும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இது மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிகளான இந்த தேசிய பூங்காவின் குமேரியா மற்றும் ரிங்கோடா ஆகிய இடங்களிலும் சவாரியை நீங்கள் அனுபவித்திட முடியும்.