குற்றால நாதர் கோவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் அவரது பெயரான திருக்குற்றால நாதர் என்ற பெயரினால் அறியப்படுகிறது.
சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் பல்வேறு கல்வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன. இந்த கோவிலானது ஆறுகள், மலைகள் மற்றும் பிரபலமான சிவமதுகை நீர்வீழ்ச்சியின் மத்தியில் அமைந்துள்ளது.
கோவில் தேவஸ்தானத்தின் மூலம் இந்த கோவிலானது நிர்வகிக்கப்படுகிறது. அகஸ்திய முனிவர் இந்த கோவிலில் வழிபாடு நடத்தினார் என்று சொல்லப்படுகிறது, எனவே இந்த கோவிலுக்கு இப்பெயர் ஏற்பட்டது.
கோவிலுக்கு அருகில் ஒரு அறை உள்ளது. இந்த அறையானது சித்திர சபா என்று அழைக்கப்பபடுகிறது. புராண கதைகள், தெய்வங்கள் மற்றும் பல முக்கிய சமய நிகழ்வுகளின் சிற்பங்கள் இங்கு உள்ளன.



Click it and Unblock the Notifications