காளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில் திரிபுராவின் கமல்பூரில் அமைந்துள்ளது. தலாய் தலைமையிடமான அம்பாசாவில் இருந்து 35கிமீ தொலைவிலும், அகர்டலாவில் இருந்து 122கிமீ தொலைவிலும் உள்ளது இவ்விடம்.
காளி அம்மனின் மற்றொரு பெயர் கமலேஸ்வரியாகும். கமல்பூர் என்ற ஊரும் காளி அம்மனின் இப்பெயராலேயே வழங்கப்படுகிறது. வருடம் முழுதும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வந்தாலும் மழை இல்லாத செப்டம்பர் முதல் மே வரையிலான மாதங்களே இக்கோவிலுக்கு வருகை தர உகந்ததாக கருதப்படுகிறது.
அகர்டலாவில் இருந்து வாடகைக் கார்கள் மூலம் இக்கோவிலுக்கு வருகை தரலாம். அம்பாசாவில் இருந்து பேருந்துமூலமும் கமல்பூருக்கு வருகை தரலாம். கமல்பூரில் ரயில் மற்றும் விமானவசதி கிடையாது. அருகாமையில் இருக்கும் ரயில்நிலையமும், விமானநிலையமும் அகர்டலாவிலேயே அமைந்துள்ளன.