நன்கு அறியப்பட்ட சுற்றுலாத்தலமாக உள்ள தால் ஏரி கடல் மட்டத்திலிருந்து 1775 மீட்டர் உயரத்தில், தர்மஷாலாவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இளம் பசுமை நிறைந்த இலைகளை உடைய தேவதாரு மரங்கள் சூழப்பட்ட இந்த ஏரி நத்தி கிராமத்திற்கும், மெஃலியோட்கஞ்சிக்கும் இடையே உள்ள சாலையில் அமைந்துள்ளது.
தர்மஷாலா மற்றும் மெக்லியோட்கஞ்ச் பகுதியிலிருந்து மலை ஏறுபவர்களுக்கு, மலையேற்ற முகாமாக இந்த தால் ஏரி விளங்குகிறது. செப்டம்பர் மாதத்தில் நடக்கும் வருடாந்திர சந்தைக்கு களமாக இந்த ஏரியின் கரையோர இடம் விளங்குகிறது.
இந்த ஏரியில் மூழ்கி எழுந்திருந்தால் நமது பாவம் அனைத்தும் விலகி, இந்துக் கடவுளான சிவனின் அருளைப் பெறலாம் என்பது ஒரு மதசம்பந்தப்பட்ட நம்பிக்கையாக உள்ளது. அதுபோலவே இதற்கு மிக அருகில் உள்ள துர்வாச முனிவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலை கண்டிப்பாக பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது.



Click it and Unblock the Notifications