கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மவுண்ட் கார்மல் ஆலயம் தர்மபுரி மாவட்டத்தின் ஒரு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் பி.பள்ளிபட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த இந்த ஆலயம் தமிழ்நாட்டின் மிக முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
பழைய கோதிக் கட்டிடகலையில் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயம் இந்து சமய கோயில்களை போல காட்சியளிக்கும். இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு குரோட்டோ என்ற திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். ஈஸ்டர் திருவிழாவிற்கு அடுத்த இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று இந்த விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வர்.



Click it and Unblock the Notifications