தர்மஸ்தாலா வருபவர்கள் சந்திரநாத சுவாமி பசாதியை பார்க்காமல் ஊர் திரும்பினால் அது கட்டாயம் முடிவு பெறாத புண்ணிய யாத்திரையாகவே அமையும். கோயிலின் உள்ளே சந்திரநாத சாமி தங்க பரிவட்டதுடன் காட்சியளிப்பதை பக்தர்கள் பார்க்கலாம். இந்தக் கோயில் ஜைன மதத்தின் முன்னோடியான பிரமான பெர்கடே என்னும் துறவியால் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்திரநாத சுவாமி பசாதி அமைதியான இடத்தில் தியானம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். கோயிலை சுற்றி உள்ள அழகழான சிற்ப வேலைப் பாடுகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். திகம்பரரின் புனிதஸ்தலமாக கருதப்படும் இது நான்கு தேவதைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பயணிகள் கோயிலுக்கு காலை 6 முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 6.30 மணியிலுருந்து 8.30 மணிவரையிலும் வரலாம்.



Click it and Unblock the Notifications