சத்ராபூரிலிருந்து 37 கிமீ தொலைவில் அதகடபட்னா உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்கள் பலவற்றை கொண்ட இடமாக அதகடபட்னா உள்ளது. கபி சூரியா பல்தேவ் ரத் மற்றும் கபி ஜடுமனி மகாபத்ரா ஆகிய பெரும் கவிஞர்களின் பிறப்பிடமாகவும் இவ்விடம் உள்ளது.
அதகடபட்னாவின் அரசராக இருந்தவர், பூரியின் மன்னராக இருந்த கஜபதிக்கு அடைக்கல் கொடுத்து, ஜெகன்நாதரின் சிலை தாக்கப்படுவதை தடுத்தார். எனவே, அவருடைய ஆட்சிக் காலத்தில் வேறு பல கோவில்களுடன் ஜெகன்நாதர் கோவிலும் மலைகள் மற்றும் மயக்கும் கானகத்தில் கட்டப்பட்டது.
தாக்குதல் முடிந்த பின்னர், அந்த சிலை பூரியில் அது இருந்த இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. அதகடபட்னாவில் இருந்த இடம் காலி செய்யப்பட்டது. இந்நாள் வரையிலும் இந்த கோவில் காலியாகவே உள்ளது.
ஜெகன்நாதர் தொடர்பான அனைத்து திருவிழாக்களும் பெரும் கொண்டாட்டங்கள் மற்றும் பகம்தியுடன், இந்த சிலையில்லாத கோவிலில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த கோவில் இன்றும் பார்க்கும் நிலையிலும், சேதமடையாமலும் உள்ளது. இந்த கோவிலின் வியக்க வைக்கும் அழகின் காரணமாக இது சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான பார்வையிடமாக உள்ளது.