ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஒடிசாவிற்கு செல்லும் நுழைவாயிலாக இருக்கும் பெஹ்ராம்பூர் நகரிலிருந்து 38 கிமீ தொலைவில் கிரிசோலா அமைந்துள்ளது. நகரங்களின் இரைச்சல்களிலிருந்து சற்றே விலகியிருக்கும் இந்த இடம் களைப்படைந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க ஏற்ற அருமையான இடமாகும்.
இந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுத்து செல்வதற்காக இங்கே ஒரு சாலையோர விடுதி அமைக்கப்பட்டுள்ளது. கிரிசோலா பகுதி பட்டி சோன்பூர் கடற்கரை மற்றும் பைய்ராபி கோவில் ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ளது.
தீபகற்ப நதியான பகுடா சோன்பூர் பகுதியை கடலிலிருந்து பிரிக்கும் போது உருவான கடற்கரையாக பட்டி சோன்பூர் கடற்கரை உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்களிடையே மிகவும் புகழ் பெற்றிருக்கும் பைராபி கோவிலில், அவர்கள் கடலுக்குள் செல்வதற்கு முன் வணங்கிச் செல்வது வழக்கம்.
சக்தி பீடமாக கருதப்படும் இந்த இடம் தற்போது சிறந்த புனிதத் தலமாக விளங்கி வருகிறது. தனிமை மற்றும் தெய்வீக தன்மைக்காக அறியப்பட்டு, அழகிய கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த கிரிசோலா கோவில் கண்டிப்பாக காண வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications