ஹூப்ளியில் உள்ள உன்கல் மலையில் அமைந்துள்ள நிருபதுங்கா சிகரம் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற மற்றொரு ஸ்தலமாகும். இந்த சிகரத்திலிருந்து கீழே மொத்த ஹூப்ளி மற்றும் தார்வாட் நகரத்தை அழகாக பார்க்க முடிகிறது.
மேற்கில் விமானதளம் வடக்கில் அமர்கோல் பகுதையையும் கூட உச்சியிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கமுடிகிறது. இந்த சிகரத்தில் உள்ள ஒரு தேவி கோயிலும் பயணிகள் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். நகர சந்தடியிலிருந்து விலகி சற்றே அமைதியான ஏகாந்தமான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஏற்ற இடம். 1974 ம் ஆண்டில் சாலைகள் நன்கு திருத்தி அமைக்கப்பட்ட பின் இது இப்பகுதியின் முக்கிய சிற்றுலா ஸ்தலமாக மாறியுள்ளது.
சாலைகள் நல்ல நிலையில் காணப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி காலை நடைப்பயணம் செல்வோர் மற்றும் உள்ளூர் ரசிகர்கள் மத்தியிலும் இது பிரபலமான ஸ்தலமாக உள்ளது.மலைக்கு 1 கி.மீ தூரத்திலேயே ஒரு நுழை வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் வாகனங்களை இந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு நுழைவுச்சீட்டைப்பெற்றுக்கொண்டு நிருபதுங்காவுக்கு செல்ல வேண்டும். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும் சிறியவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.