ஆந்த்ரபாலஜிகல் மியூசியம் எனப்படும் இந்த மானுடவியல் அருங்காட்சியகம் 1972ம் ஆண்டு ஜக்தல்பூர் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பஸ்தார் பழங்குடி மக்களின் பாரம்பரிம் மற்றும் கலாச்சார அடையாளங்களை காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த அருங்காட்சியகம் துவங்கப்பட்டிருக்கிறது.
ஜக்தல்பூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் ஏராளமான நாட்டுப்புற பழங்குடி பாரம்பரியம் சார்ந்த அரும்பொருட்கள் மற்றும் மாதிரி அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
தலைப்பாகைகள், காலணிகள், நகைகள், இசைக்கருவிகள், உடைகள், ஓவியங்கள், மரக்குடைவு பொருட்கள், ஆயுதங்கள், முகமூடிகள், கலைப்பொருட்கள், சிற்பங்கள் போன்ற பல்வேறு வகைகளைச்சேர்ந்த காட்சிப்பொருட்களை இங்கு பார்க்கலாம்.
பழங்குடி மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வித்தியாசமான பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பஸ்தார் பகுதியில் வசிக்கும் பல்வேறு பழங்குடி இனத்தாரின் பாரம்பரிய சிறப்பம்சங்கள், வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் உதவியாக உள்ளது.



Click it and Unblock the Notifications