ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 84 கி.மீ தூரத்தில் இந்த மா தண்டேஷ்வரி கோயில் அமைந்துள்ளது. ஷக்தியின் அவதாரமாக கருதப்படும் இந்த தண்டேஷ்வரி சக்தி கொண்ட உள்ளூர் குல தெய்வமாக வணங்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் துஷேரா பண்டிகையின்போது இக்கோயிலுக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்கில் இந்த தெய்வத்தை வழிபடுவதற்காக வருகை தருகின்றனர். தென்னிந்திய கோயிற்கலை மரபுப்படி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் 14ம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலில் வீற்றிருக்கும் தண்டேஷ்வரி சிலை கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்கிருஹம், மஹா மண்டபம், முக்ய மண்டபம் மற்றும் சபா மண்டபம் போன்ற அங்கங்கள் இந்த கோயிலில் இடம் பெற்றுள்ளன.
கோயிலின் முன்புறத்தில் ஒரு கருடத்தூண் அமைப்பும் காணப்படுகிறது. பிரம்மாண்டமான சுற்றுச்சுவரால் சூழப்பட்டு விசாலமான உள்பிரகார வெளியை கொண்டதாக இந்த கோயில் அமைந்திருக்கிறது. கோயில் கோபுர அமைப்பும் கலையம்சங்கள் நிரம்பியதாக காட்சியளிக்கிறது.