கைலாஷ் குகைகள் எனும் இந்த பாறைப்படிம குகை அமைப்புகள் மிகுல்வாடா எனும் இடத்துக்கு அருகே கங்கேர்காட்டி தேசிய இயற்கை பூங்கா வளாகத்தில் அமைந்திருக்கின்றன.
1993ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகைகள் தரையிலிருந்து 40 மீ உயரத்தில் 250 மீ நீளமுடையதாக காணப்படுகின்றன. ஸ்டாலக்சைட் மற்றும் ஸ்டாலக்மைட் பாறைகளால் உருவாகியிருக்கும் இந்த இயற்கையான குகைக்குடைவு அமைப்புகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அழகுடன் காட்சியளிக்கின்றன.
ஒரு குறுகிய துளை போன்ற வாசற்பகுதி வழியாகத்தான் இந்த குகை அமைப்பிற்குள் செல்ல முடியும். இதன் உள்ளே சிவலிங்கம் போன்ற ஒரு பாறை எழுச்சி காணப்படுகிறது.
வெற்றிடத்தை கொண்டுள்ள ஓடு போல அமைந்திருக்கும் குகைச்சுவர்களை கைகளால் தட்டும்போது வித்தியாசமான இசை ஒலிகள் எழும்புவது ஒரு அதிசயமாகும்.
இந்தியாவில் இது போன்ற பாறைக்குகை அமைப்புகள் வேறெங்கும் இல்லை என்பதால், வித்தியாசமான இயற்கை ஸ்தலங்களை தேடி விஜயம் செய்யும் சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய அதிசயக்குகை இது.