கங்கேர் தாரா எனும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் கங்கேர்காடி தேசியப்பூங்காவின் உள்ளே ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
பூங்காவின் நுழைவாயிலில் வனக்காவல் அதிகாரியின் அனுமதி மற்றும் சீட்டுகளை பெற்ற பிறகே இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்ய முடியும். குளிர்காலத்திலிருந்து கோடைக்காலம் வரை இப்பகுதிக்கு விஜயம் செய்யலாம். ஜூலையில் தொடங்கும் மழைக்காலத்தில் இந்த பூங்கா மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.
கங்கேர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் கங்கேர் தாரா எனும் இந்த நீர்வீழ்ச்சி கங்கேர் ஆற்றில் உருவாகிறது. மடிப்பு மடிப்பான பாறை அமைப்புகளோடு இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி காட்சியளிக்கிறது. இந்த பாறை மடிப்புகள் எரிமலைப்பாறை துருத்தல்களால் உருவாகியிருக்கலாம் என்று புவியியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.