ஜக்தல்பூரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் NH-16 நெடுஞ்சாலையில் (ஜக்தல்பூர்-கீடம் ரோடு) மண்டவா எனும் இடத்தில் இந்த மண்டவா நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 70 அடி உயரத்திலிருந்து செங்குத்தாக விழும் இந்த நீர்வீழ்ச்சி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அழகுடன் காட்சியளிக்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீர் ஒரு குளம் போன்ற நீர்த்தேக்கத்தில் சேகரமாகி பின்னர் கீழ்நோக்கி பாய்ந்து கங்கேர் ஆற்றில் கலந்தபிறகு மற்றும் இரண்டு நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது.
இவை திரத்கர் மற்றும் கங்கேர்தாரா என்று அழைக்கப்படுகின்றன. தட்டையான காட்சித்தளம் மற்றும் சமமான பாறை அமைப்புகள் இந்த நீர்வீழ்ச்சிக்கருகில் அமைந்திருப்பதால் சுற்றிலும் காணப்படும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்க வசதியாக உள்ளது.



Click it and Unblock the Notifications