ஜாம்நகரில் உள்ள ஒரு மயான வளாகமே மானெக்பாய் முக்திதாம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது அமைதியான சூழலுடன் காட்சியளிக்கிறது.
பசுமையான தோட்டப்பூங்கா, சிலைகள், ராமாயண சம்பவங்களை சித்தரிக்கும் சுவர்ச்சித்திரங்கள் மற்றும் ஒரு நூலகம் ஆகியவை இந்த முக்திதாம் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஜாம்நகர் நகர மையத்திலிருந்து 10 நிமிட பயண தூரத்திலேயே இந்த இடம் அமைந்திருக்கிறது.