சுங்கடாகட்டி என்ற இடத்திலிருந்து கொடுக்கப்படும் யானைச்சவாரி ஏற்பாடுகள் பயணிகளுக்கு கபினி வனப்பிரதேசத்தின் உட்பகுதியை பார்க்க உதவியாக இருக்கும். ஜீப் செல்லமுடியாத காட்டு பகுதிகளுக்கு சென்று ரசிப்பதற்கு இந்த யானைச்சவாரி உதவியாக உள்ளது.
இயற்கையை பார்த்து ரசிப்பதுடன் யானையின் மீது அமர்ந்து பிரயாணம் செய்யும் கிளர்ச்சியான அனுபவத்தை பயணிகள் பெற்று மகிழலாம். வரலாற்றுக்காலத்தில் அரசர்கள் யானை மீது இப்படித்தான் அமர்ந்து பயணித்திருப்பார்கள் என்று பயணிகள் கற்பனை செய்து இன்புறலாம்.
இந்த சவாரியின்போது யானையின் முதுகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மேடை போன்ற மிருதுவான இருக்கையின் மீது அமர்ந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் நாலாபுறமும் இயற்கை அழகை பார்த்து ரசிப்பதற்கேற்ப மெதுவாக நடந்து செல்லும்படி யானைகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன.