கேரள மாநிலத்தின் வயநாட் பகுதியில் மனந்தவதி ஆறு மற்றும் பனமரம் ஆறு இரண்டு கலந்து ஓடிவரும் இந்த கபினி ஆறும் பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாகும்.
கபிலா என்ற பெயராலும் அறியப்படும் இந்த கபினி ஆறு 55 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியின் சூழலியல் சமநிலைக்கு உதவியாக உள்ளது. திருமாக்கூடல் நரசிப்புரா ஸ்தலத்தில் இந்த கபினி ஆறு காவிரி ஆற்றுடன் கலக்கிறது.1974ம் ஆண்டு இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணையை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இந்த அணை 2284 அடி (696 மீட்டர்) நீளமும், 190 அடி (58 மீட்டர்) உயரமும் கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
பீச்சனஹள்ளி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள இந்த அணைக்கு ஹெக்கடதேவன கோட்டே என்ற இடத்திலிருந்து செல்லலாம். கபினி ஆற்றுப்பகுதி மற்றும் அணைக்கு விஜயம் செய்யும் பயணிகள் இதன் அருகிலேயே உள்ள, யானைகளுக்கு புகழ்பெற்ற நாகர்ஹோலே தேசிய வனவிலங்குப்பூங்கா பகுதிக்கும் விஜயம் செய்யலாம்.