இந்தப் பெயர் பலருக்கு அசாதாரணமாக தோன்றலாம். ஆனால் இந்த கற்றாழை நாற்றங்கால் உண்மையில் காலிம்பொங் சுற்றுலாவில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஏனெனில் இந்த இடத்திற்கான நுழைவுக் கட்டணம் ரூ 20 மட்டுமே.
இந்த நாற்றங்காலின் காப்பாளர்கள் கற்றாலைகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களுக்கு வெளியே வளர்த்து நன்கு பராமரித்து வெற்றி கண்டுள்ளனர். இது உண்மையில் ஒரு சாத்தியமற்ற பணியாகும்.
புகைப்பட கலைஞர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையேனும் இங்கு வர வேண்டும். மேலும் காலிம்பொங்கிற்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு வருகை தர வேண்டும்.
இங்கு வரும் பயணிகள் இங்கு நியாயமான விலையில் விற்கப்படும் மாதிரிகளை வாங்கிச் செல்லலாம். இந்தத் தோட்டத்தின் உரிமையாளர்கள் பயணிகளுக்காக ஒரு இலவச விடுதியை இந்தத் தோட்டத்தின் வளாகத்தில் பராமரித்து வருகின்றன.