பல மதங்களை சேர்ந்த மக்களும் இணக்கமாக வாழும் முக்கிய இந்திய நகரங்களில் காலிம்பொங்கும் ஒன்றாகும். அதற்கு இங்குள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஏனெனில் இந்த திருச்சபை மடங்கள், கோவில்கள் மற்றும் மசூதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. நீங்கள் கோம்பஸ் விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தால் இந்த திருச்சபையை தெரு வழியே நடந்தே அணுகலாம்.
தேவாலயத்தில் கட்டிடக்கலை காலனித்துவ முறையில் உள்ளது. சந்தி நேர அமைதியையும் அழகையும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த திருச்சபை ஒரு முக்கிய சுற்றுலா இடமாக திகழ்கிறது.