இந்திய-திபெத் நெடுங்சாலையான NH-22 வழியாக வரும் சுற்றுலாப்பயணிகள் போவாரி என்ற இடத்தில் வண்டியை திருப்பி கல்பாவிற்கு வந்து சேரலாம். இது மட்டுமல்லாமல் சிம்லா மற்றும் ராம்பூரில் இருந்து கல்பாவிற்கு இயக்கப்படும் சில அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் சுற்றுலாப்பயணிகள் வரலாம். கோடைகாலங்களில் திறந்திருக்கும் ரோஹ்டாங் கணவாய் வழியாக வரும் பஸ்களிலும் சுற்றுலாப்பயணிகள் கல்பாவிற்கு வரலாம்.