புகழ் பெற்ற பக்தி இயக்க பெண் துறவியான காரைக்கால் அம்மையாரை வழிபடுவதற்கான இடமாகவே காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒரேயொரு பெண்பால் மனிதர் இவர் மட்டுமே.
இந்த சிறிய, அழகிய கோவிலை 1929-ஆம் ஆண்டு கட்டியவர் மலையபெருமாள் பிள்ளை என்பவராவார். இந்த கோவிலில் மிகப்பெரிய பெண் கடவுளாக இருக்கும், புனிதவதியார் என்ற பெண் கடவுளின் சிலையும் உள்ளது.
அபூர்வமான சக்திகளை வேண்டி இந்த பெண் கடவுளை உள்ளூர்வாசிகள் துதித்திருப்பார்கள். புராணக்கதைகளில், தன் கணவர் தன்னை மறுதலித்துவிட்டு விலகிப்போய் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டபோது, இவர் சிபெருமானை நோக்கி தவமிருந்து, அவரிடம் தன்னை ஒரு பேயுருவில் மாற்றிவிடுமாறு கேட்டுக்கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இவர் ஆலங்காடு வனப்பகுதிகளில் வசித்து வந்தார். அவருடைய பக்தியைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவருக்கு அம்மையார் என்ற பெயரிட்டு, தான் புரியும் தாண்டவ நடனத்திற்கு பாடல் பாடும் பெருமையை அளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாதமான ஆனி மாதத்தின் பௌர்ணமி தினத்தில், அதாவது ஜுன்-ஜுலை மாதங்களில் காரைக்கால் அம்மையார் கோவிலில் 'மாங்கனி' திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அம்மையாரின் அருளைப் பெறுவதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்திடும்.



Click it and Unblock the Notifications