லாண்ஸ்டவுனுக்கு சுற்றுலா வரும் பயணிகள், ஜங்கிள் சஃபாரியில் ஈடுபடுவதில் அதிக ஆர்வக் காட்டி வருகின்றனர். இங்கு இயற்கையின் மடியில் அமைந்துள்ள பச்சைப்பசேலான ஓக் மற்றும் பைன் மரங்கள், பார்வையாளர்களுக்கு மனதை விட்டு நீங்காத பரவசத்தை தருகின்றன.
இக்காடுகளில், தனித்துவம் வாய்ந்த ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. எனவே, இவ்விடம் உயிரியல் ஆராய்ச்சிக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகின்றது.
இப்பகுதியில் ஆண்டு முழுவதும் இதமான வானிலையே நிலவுகிறது. காலார இக்காடுகளில் உள்ள புள்வெளிகளில் உலவுவதும் ஒரு இதமான அனுபவமாகும்.



Click it and Unblock the Notifications