வீரபத்ரர் ஆலயம் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் விஸ்வகர்மா சிற்பிகளின் கலைத்திறனை உலகுக்கு இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
இங்கு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும் மண்டபங்கள் கோயிலின் கட்டிடக்கலை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கக் கூடியவை. இதில் குறிப்பாக ஒரே ஒரு மண்டபம் நடனக் கலைஞர்கள் மற்றும் இசை விற்பன்னர்களின் பிரம்மாண்ட உருவங்களை கொண்ட தூண்களுடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
அதோடு கோயிலில் உள்ள ஓரே கல்லாலான நந்தியின் சிலை பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்ட வீரபத்ரர் ஆலயம் நாடு முழுவதுமிருந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், பயணிகளையும் ஈர்த்து வருகிறது.



Click it and Unblock the Notifications