பிரதாப்கர் கோட்டையை மஹாபலேஷவரின் ஒரு மிகப்பெரிய சுற்றுலா கவர்ச்சி அம்சம் என்றே சொல்லலாம். 1856ல் கட்டப்பட்ட இந்த புகழ் பெற்ற கோட்டை மஹாபலேஷ்வரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. இது சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் ஆணைப்படி கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
பெரிய பெரிய அறைகளையும், இயந்திரப்பொறிக் கதவுகளையும் கொண்டுள்ள இந்த கோட்டை பிஜாபூர் தளபதி அப்சல் கானின் மரணம் நிகழ்ந்த இடமாகவும் வரலாற்றில் இடம் பெறுகிறது.
இந்த கோட்டையில் தளபதி அப்சல் கானுக்கான சமாதி ஒன்றும் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. கோட்டைக்கு அருகாமையிலேயே ஒரு சிவன் ஆலயம் ஒன்றும் உள்ளது.
தூரத்திலிருந்து பார்க்கும் போது, இந்த கோட்டையானது ஒரு வட்டமான மலை போன்று தோற்றமளிப்பது ஓர் ஆச்சரியம். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications