தாய் கா மஹால் ஒரு பரபரப்பான சுற்றுலாத் தலமாகும். காலத்தைக் கடந்து நின்று கொண்டிருக்கும் பல்வேறு நினைவுச் சின்னங்கள், அரண்மனைகள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு வளமான அரசாங்கமாகவே மண்டு இருந்திருக்கிறது.
அந்த வகையில் காண்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் இடமாக தாய் கா மஹால் உள்ளது. 'தாய்' என்றால் 'மாற்றுத் தாய் செவிலியர்' என்று பொருளாகும்.
உலகம் முழுவதுமே பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த இராஜ குடும்பத்தினரின் வீடுகளில், பல்வேறு காரணங்களுக்காக வேலை செய்து வந்தவர்கள் தான் இந்த 'மாற்றுத் தாய் செவிலியர்கள்' (Wet Nurses).
இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பணிகளை செய்து கொண்டிருக்கும் போதும், வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக இரஜ குடும்பத்தைச் சேர்ந்த தாயினால் தன்னுடைய மார்பிலிருந்து பால் கொடுக்க முடியாத காலங்களிலும், இராஜ குடும்ப வாரிசுகளை பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்க்க வேண்டியது இந்த செவிலியர்களின் கடமைகளாகும்.
அவர்கள் வசித்து வந்த மஹால்கள் மற்றும் அரண்மனைகளில் அவர்களுடைய உயர்நிலை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தாய் கா மஹால் மற்றும் தாய் கி சோட்டி பெஹென் கி மஹால் ஆகியவை இன்றளவும் கூட மண்டுவில் இந்த 'மாற்றுத் தாய் செவிலியர்கள்' அனுபவித்து வந்த உயர்நிலையை வெளிப்படுத்தி வருகின்றன.



Click it and Unblock the Notifications