காலங்களைக் கடந்தும் ஒரு காதல் காவியத்தை, மிகவும் கடினமான இதயத்தைக் கொண்டவர்களும் கூட ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்க வைக்கும் இடமாகவே ரூப்மதி பெவிலியன் உள்ளது. பாஸ் பகதூர் மற்றும் இராணி ரூப்மதி ஆகியோரின் காதலுக்கு சான்றாக இன்றும் இந்த ரூப்மதி பெவிலியன் நின்று கொண்டுள்ளது.
மதம் மற்றும் உலக பிடிப்புகளிலிருந்து விடுபட்டும், தியாகத்தின் உருவமாகவும் இந்த இடம் மண்டுவில் இன்றளவும் உள்ளது. திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும், பல்வேறு புனைகதைகளுடன் உலவி வரும் இந்த காதல் கதைகளில் எது உண்மை, எது நிதர்சனம் என்பதில் இன்று வரையிலும் தெளிவில்லை.
உண்மையில் இது இராணுவத்திற்கான கண்காணிப்பிடமாகவே ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்தாலும், அதன் மேற்குப் பகுதி இராணி தன்னுடைய காதலுக்குரிய அரசரைக் காணும் வகையிலும், அவருக்கு மிகவும் பிடித்தமான நர்மதை நதியைக் காணும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த அரண்மனையிலிருந்து அற்புதமான காட்சிகளைக் காணும் சுற்றுலாப் பயணிகள், காதல் அனைத்தையும் வென்று விடும் என்ற உண்மையை தவறாது புரிந்து கொள்வார்கள்.
இந்த அரண்மனையிலிருந்தவாறே, நர்மதை நதியின் பின்னணியில் சூரிய அஸ்தமனத்தை காணும் சுற்றுலாப் பயணிகளுக்கு, அந்த காட்சி என்றென்றும் நினைவை விட்டு நீங்காத காட்சியாகவே இருக்கும். இந்த அரண்மனைக்கு அருகில் உள்ள மற்றுமொரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக 'எக்கோ பாயிண்ட்' உள்ளது.



Click it and Unblock the Notifications