மண்டுவில் சுற்றுலாப் பயணிகள் அதகளவில் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாக ரூபயான் அருங்காட்சியகம் உள்ளது.
இந்த அருங்காட்சியத்தில் நிலையான மற்றும் தற்காலிகமான என பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. அவை அறிவியல், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், பரிணாம வளர்ச்சி அல்லது வரலாறு என்ற பிரிவுகளைச் சார்ந்தவையாக இருக்கும்.
உலகம் முழுவதும் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில இருக்கும் அருங்காட்சியகங்கள் நம் வாழ்க்கை முறைகளைக் காட்டுவதாகவும், காலப் போக்கில் மங்கிக் கொண்டோ அல்லது மாறிக் கொண்டோ வரும் கலாச்சாரத்தைப் பற்றிக் காட்டுவதாகவே உள்ளன.
எனவே அருங்காட்சியகங்களை, வாழ்ந்த காலத்தை சற்றே கலவையாக்கி கட்டி வைத்து காட்சிகளாக வைத்திருக்கும் இடங்கள் எனலாம். அந்த வகையில் அக்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் கைக்கருவிகள் ஆகியவற்றின் மாதிரிகளைப் பத்திரப்படுத்தி உள்ளூர் மக்களின் வாழ்க்கையின் காட்சிகளைக் காட்டும் இடமாக ரூபயான் மியூசியம் உள்ளது.
சர்வதேசப் புகழ் பெற்ற நாட்டுப்புற இசைக் கலைஞரான கமால் கோத்தாரி என்பவரின் குழந்தையான இந்த மியூசியம் ஜோத்பூரின் புறநகர்ப் பகுதிகளில் உள்ளது.
மாநில அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த 'வாழும் தொழில்நுட்பத்தை அறிவதற்கான' அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ருபயான் சன்ஸ்தான் இந்த அருங்காட்சியகத்தின் முதன்மை பராமரிப்பாளராக உள்ளார்.



Click it and Unblock the Notifications