ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்துள்ள முதன்மையான சுற்றுலா தலம் ஜமு சிகரமாகும். ஜமு சிகரத்திலிருந்தவாறு, பார்வையாளர்கள் 8 கிமீ தொலைவில் உள்ள ரேணுகா ஏரியையும் மற்றும் சிகரத்தைச் சுற்றியுள்ள பசுமைப் போர்வையையும் காணலாம்.
உள்ளூர் மக்களின் நம்பிக்கைப் படி ஜமதக்னி முனிவர் இந்த சிகரத்தின் உச்சியில் அமைந்திருக்கும் சிறு கோவிலின் தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்து மத புராணங்களிள், ஜமதக்னி முனிவர் சப்தரிஷிகள் என்றழைக்கப்பட்ட ஏழு முனிவர்களில் ஒருவர் எனவும், அவருடைய மகனான பரசுராமர் மகா விஷ்ணுவின் ஒரு அவதாரமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
இங்கே காணப்படும் சிறிய காலடிப்பாதையின் வழிகாட்டுதலில் இந்த கோவிலை பார்வையாளர்கள் அடைய முடியும். 932 மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சிகரம் பார்வையாளர்களுக்கு மலையேறும் வாய்ப்புகளை கொடுக்கும் இடமாக இருக்கிறது. இந்த இடத்திற்கு வருகை தருவதற்கு ஏற்ற மாதங்களாக குளுமையும், வசதிகளும் நிறைந்த டிசம்பர் முதல் மார்ச் மாதங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.