மகர பொங்கல் தமிழ்நாடு முழுவதும் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். ஜனவரி மாதம் 12 முதல் 15 ஆம் தேதி வரை, இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருவிழா, கொண்டாடுபவர்களின் வாழ்வில் வளம் மற்றும் செல்வத்தை தரும் என்று நம்பப்படுகிறது. பயிர்கள் வளர உதவி செய்யும் சூரியனுக்கும் வருண பகவானுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்துக்கள் தங்கள் வீடுகளை பூக்களால் அலங்கரித்து, வாசலில் மலரிதழ்கள் மற்றும் வண்ணாப்பொடிகளைப் பயன்படுத்தி ரங்கோலி போடுகின்றனர் . பால், அரிசி மற்றும் வெல்லம் பயன்படுத்திச் செய்யப்படும் சர்கரைப் பொங்கல் என்ற சிறப்பு இனிப்பை, மகர பொங்கல் தினத்தன்று அனைவரும் உண்டு மகிழ்கிறார்கள்.