சஹஸ்ரலிங்க தலாவ் என்ற நீர்தேக்க அணை 1084-ஆம் ஆண்டு சித்ராஜ் ஜெய்சிங் என்பவரால் துர்லாப் சரோவர் ஏரியின் மீது கட்டப்பட்டது. இந்த நீர்தேக்கத்தின் பெயருக்கு ஆயிரம் லிங்கங்களை கொண்ட ஏரி என்று பொருளாகும்.
இந்த ஏரி குஜராத் மாநிலத்தில் உள்ள படனில் இருக்கும் ராணி கி வாவ் என்ற இடத்தின் வடக்கு திசையில் அமைந்துள்ளது. மூன்று முறை இந்த ஏரி தாக்குதலுக்கு உட்பட்டாலும், இன்னமும் கூட சில பகுதிகள் அப்படியே இருக்கின்றன.
இந்த நீர் தேக்கம் சரஸ்வதி நதியின் நீரை கால்வாயாக மாற கட்டப்பட்டாகும். இதில் இயற்கை வடிக்கட்டுதல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தூண்களை தாங்கி நிற்கும் நிலை மேடைகளை காணும் போது ஏரியின் முழுமையான மெய்நிகர் காட்சியை ரசிக்கலாம். இந்த நீர் தேக்கத்தில் பல கடவுள்களின் சிலைகளை காணலாம்.



Click it and Unblock the Notifications