ஜுலாகட் எனும் இந்த கிராமம் பித்தோராகர் நகரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்திய – நேபாள எல்லைப்பகுதியில் இந்த கிராமம் அமைந்திருக்கிறது. காளி ஆறு இந்த எல்லைப்பகுதியில் கிழக்கு மேற்காக பாய்கிறது.
இங்கு காளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஒரு தொங்கு பாலம் இந்தியாவையும் நேபாளத்தையும் இணைப்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் காளி ஆற்றை ஒட்டியே அமைந்திருக்கும் மஹேசானி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். காளி ஆற்றில் மிதவைப்படகு சவாரியிலும் பயணிகள் ஈடுபடலாம்.
ஜுலாகட்டிலிருந்து 4 கி.மீ தூரத்திலுள்ள தாலேஷ்வர் கோயில் பயணிகள் தரிசிக்க வேண்டிய மற்றொரு ஆன்மீக அம்சமாகும். திரிபுரசுந்தரி எனும் கோயிலும் இங்கிருந்து 8 கி.மீ தூரத்தில் நேபாளப்பகுதியில் அமைந்துள்ளது.