பழமையான இந்த நகர நுழைவாயில் அமைப்பு தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. இது1792ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டத்துவங்கப்பட்டு டேனிஷ் ஆட்சியாளர்களால் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நகரங்களில் காணப்படும் நகர வாயில்களை போன்று இது வடிவமைக்கப்பட்டிருப்பதால் கட்டிடக்கலை ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் ஒரு அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.