ராஜிவ் லோச்சன் கோயில் ராஜிம் நகரத்திலுள்ள மிக முக்கியமான கோயிலாக பிரசித்தமாக அறியப்படுகிறது. நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளை கொண்ட இந்த கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் யாத்ரீகர்கள் இந்த கோயிலை தரிசிப்பதற்காக வருகை தருகின்றனர்.
இந்த ராஜிவ் லோச்சன் கோயிலின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் 12 உறுதியான கோபுரத்தூண்களின்மீது எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த கற்தூண்களில் ஹிந்து கடவுள்களின் உருவங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டு காட்சியளிக்கின்றன.
இந்த கோயில் வாசல் அமைப்பில் அலங்கார தோரண அம்சங்கள் மற்றும் மனித உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ராஜிவ் லோச்சன் கோயில் வளாகத்தின் உள்ளே வாமனர், நரசிம்மர், சிவபெருமான் மற்றும் இதர தெய்வங்களுக்கான சன்னதிகளும் அமைந்திருக்கின்றன.