இந்த்ரசானி மன்சா தேவி கோயில் என்று அழைக்கப்படும் இந்த முக்கியமான ஆன்மீக ஸ்தலம் கண்டலி பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளல்து. புராணிகக்கதைகளின்படி இந்த புராதனக்கோயில் ஆதி சங்கராச்சாரியார் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
நாகங்களின் தெய்வமான இந்த்ரசானிக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. ருத்ரபிரயாக் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இந்த கோயில் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சிளிக்கின்றது.
ஸ்கந்தபுராணம், தேவிபாகவத்ம் மற்றும் கேதார்கண்ட் புராணங்களின்படி இந்த்ரசானி தேவி காஷ்யப மன்ஷி கன்யாவாக கருதப்படுகிறார். வைஷ்ணவி, ஷாவி மற்றும் விஷாரி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இத்தெய்வம் பாம்புக்கடி விஷத்தை குணப்படுத்துவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.