கார்த்திக் ஸ்வாமி கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஆன்மீகத்தலங்களில் ஒன்றாகும். ருத்ரபிரயாக் நகரிலிருந்து 38 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் சிவபெருமானின் மகனான கார்த்திகேயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 3048 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் ஸ்தலமானது சுற்றிலும் பிரம்மாண்டமான இமயமலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கிறது.
புராணக்கதைகளின்படி, சிவபெருமான் தனது இரு மகன்களான கணேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரிடமும் யார் உலகை முதலில் சுற்றி வருகிறாரோ அவரே தன்னையும் பார்வதியையும் முதலில் பூஜிக்கும் உரிமையை பெறுவர் என்று சொன்னதாகவும், அதன்படி கணேஷ் சாமர்த்தியமாக சிவன் பார்வதியை உலகமாக கருதி அவர்கள் இருவரையும் சுற்றி வந்து போட்டியில் வென்று தனது உரிமையை பெற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதில் கோபமடைந்த கார்த்திகேயன் தனது எலும்புகளை தந்தையிடமும் சதையை தாயிடமும் அளித்துவிட்டதாக அந்த புராணக்கதை முடிகிறது. இக்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் அந்த எலும்புகள் பக்தர்களால் வணங்கப்படுகிறது.
ருத்ரபிரயாக்-போக்ரி மலைப்பாதையில் அமைந்துள்ள இக்கோயிலை கனக் சௌரி எனும் கிராமத்திலிருந்து 3 கி.மீ தூரம் மலையேற்றம் செய்து யாத்ரீகர்கள் சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications