சாங்க்லி நகரத்தின் அருகில் உள்ள இந்த சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ளது. இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடிக்கும்படியாக இங்கு பலவகை தாவரவகைகளும் உயிரினங்களும் காணப்படுகின்றன.
சாங்க்லி நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள இந்த சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் மனித முயற்சியில் காட்டுப்பிரதேசங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
10.87 ச.கி.மீ பரப்பளவிற்கு பரந்து காணபடும் இந்த சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயத்தில் சிறுத்தைகள், மான்கள், காட்டுப்பசு, மயில் மற்றும் முயல்கள் போன்றவை வசிக்கின்றன. பலவகை பூச்சி வகைகள் மற்றும் ஊர்வன விலங்குகளையும் இங்கு காணலாம்.
இந்த சரணாலயத்திற்கு அருகிலேயே சங்கமேஷ்வர் கோயிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications