அசோகரின் தூண்கள் என்பவை வட இந்தியாவில் தொடர்ச்சியாக காணப்படுபவைகளாகும். இந்த தூண்களின் பெயருக்கேற்ப, இவற்றை கி.மு.3-ம் நூற்றாண்டில் அசோகர் தான் எழுப்பியிருக்கிறார்.
இந்த தூண்கள் அனைத்துமே 40 முதல் 40 அடிகள் உயரமாகவும், சுமார் ஓரு டன் எடை கொண்டதாகவும் உள்ளன. இந்த தூண்கள் உருவாக்கப்பட்டுள்ள கற்கள், வாரணாசிக்கு அருகிலிருக்கும் சூனார் என்ற இடத்தில் வெட்டி எடுக்கப்பட்டு சாரநாத்திற்கு கொண்டு வந்து தூண்களாக நிறுவப்பட்டிருக்கின்றன.
பல்வேறு தூண்கள் கட்டப்பட்டிருந்தாலும், அவற்றில் சில மட்டுமே எழுத்துருக்களைத் தாங்கியவாறு இன்றளவும் நிலைத்து நின்று கொண்டுள்ளன. இவற்றில், நான்கு சிங்கங்களை நான்கு திசைகளிலும் நோக்கியபடி கொண்டுள்ள அசோகர் தூண் மிகவும் புகழ் பெற்றதாகும்.
இந்த சின்னம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு சிங்கங்களும் வலிமை, வீரம், பெருமை மற்றும் உறுதியை உணர்த்துவதாக உள்ளன. இந்த தூணின் அடியில் இருக்கும் அசோக சக்கரம் இந்திய தேசிய கொடியின் மையப்பகுதியை அலங்கரிக்கும் பெருமையைப்பெற்றுள்ளது.